நாமக்கல் அருகே, பட்டதாரி பெண்ணை கொலை செய்த வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்ற கோரி விவசாயிகள் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட்...
நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் அடுத்து உள்ள கரப்பாளையத்தை சேர்ந்தவர் நித்தியா.
வரும் 31ஆம் தேதிக்குள் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று, தமிழக அரசுக்கு பா.ம.க...
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் பா.ம.க 2.0 விளக்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
தனக்கு எதிரான அரசியல் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தரப்பில் முறையீடு...
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கடந்த நவம்பர் மாதம்
2 வது இளைஞரணி மாநாடு ஏன்? மாநாட்டை சேலத்தில் நடத்தியதற்கான காரணம் என்ன?
ஒற்றை செங்கல்லில் ஆரம்பித்து சனாதனம் வரை பேசி தேசிய அளவில் உதயநிதியின் பெயர் பதிவாகியுள்ள இந்த நேரத்தில், 1.5 லட்சம் தொண்டர்களுக்கு இருக்கைகள், 2 லட்சம் தொண்டர்களுக்கு அசைவ விருந்து, பெரியார், அண்ணா,...
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் 3 ஆயிரத்து 632 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள நிலையில், வேட்பு மனுக்கள்...
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டமன்ற தேர்தல், மே மாதம் 10ஆம் தேதி நடைபெற உள்ளது.
55 வயதில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, பாஜக முன்னாள் MLA ராஜேஷ் மிஸ்ரா சட்டம் படிக்கவேண்டும்...
உத்தரப்பிரதேச மாநிலத்தில் இடைநிலைக் கல்வி கவுன்சில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தியது.
தமிழகத்தின் வளர்ச்சிக்கு சட்டம்-ஒழுங்குதான் முக்கிய காரணம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்….
2 நாள் பயணமாக விழுப்புரம் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,
இந்தியாவின் துணிச்சலான பெண் மம்தா பானர்ஜி நாட்டின் பிரதமராக வேண்டும் என்று, பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியசுவாமி தெரிவித்துள்ளார்…!
அப்போது பேசிய அவர், ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களால் மிரட்ட முடியாத உண்மையான எதிர்க்கட்சி நாட்டிற்கு தேவை என்று தெரிவித்தார்.
அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கிய 5 நீதிபதிகள் யார்? இப்ப என்ன செய்கிறார்கள் தெரியுமா?
அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கிய 5 உச்சநீதிமன்ற நீதிபதிகள் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற தகவல் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. யார் அந்த ஐந்து நீதிபதிகள், அவர்கள் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
ராமர் கோயிலானது சட்டப்படி கட்டப்பட்டுள்ளதாக பேசிய பிரதமர் மோடி, அயோத்தி தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு நன்றி தெரிவித்தது அரசியல் வட்டாரங்களில் விவாதப்பொருளானது. அது மட்டுமில்லாமல் குறிப்பிட்ட ஐந்து நீதிபதிகளுக்கும் கோயில் திறப்பு விழாவுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டதும் பேசுபொருளாக மாறியது. அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கில், அந்த இடம் இந்துக்களுக்கே சொந்தம் என 2019ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
தீர்ப்பு வழங்கிய அந்த நீதிபதிகள் அமர்வில் பங்குபெற்றிருந்த நான்கு நீதிபதிகள் ஓய்வு பெற்று வெவ்வேறு பொறுப்புகளில் பதவி வகித்து வருகின்றனர். தீர்ப்பு வழங்கிய சமயத்தில் அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவர் ரஞ்சன் கோகோய். ஓய்வு பெற்ற பிறகு அவர் தற்போது ராஜ்ய சபா உறுப்பினராக உள்ளார்.
மற்றுமொரு நீதிபதியான ஷரத் அரவிந்த் போப்டே, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகி, 2021ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற பிறகு மகாராஷ்டிரா தேசிய சட்டப் பல்கலைக்கழக வேந்தராக பதவி வகித்து வருகிறார்.
அதே போல, 2021ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற அசோக் பூஷன், தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அயோத்தி தீர்ப்பு அமர்வில் அரசியல் சாசனப்படி இடம்பெற்றிருந்த அப்துல் நசீர், ஆந்திர பிரதேச ஆளுநராக இருக்கும் நிலையில், அதேபோல அமர்வில் ஒரு அங்கமாக இருந்த சந்திரசூட் தற்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ளார்.
இந்தியாவின் ஐம்பதாவது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியான சந்திரசூட் வரும் நவம்பர் மாதம் வரையில் அந்தப் பணியில் தொடர்வார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஆளும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பங்கேற்கவில்லை.
ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட், சச்சின் பைலட் என இரு தலைவர்களிடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.