‘இரட்டைத் தலைமை தொடரும் – சசிகலாவுக்கு இடமில்லை’
அதிமுகவில் இனி இரட்டைத் தலைமைதான்; சசிகலா, டிடிவியை இணைப்பது குறித்த கேள்விக்கே இடமில்லை. அதிமுகவில் நிரந்தரப் பொதுச் செயலாளர் ஜெயலலிதா மட்டும் தான் என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
கொரோனா விதிமீறல் – கமலிடம் விளக்கம் கேட்கப்படும்
7 நாள் வீட்டு தனிமைக்காலத்தை நிறைவு செய்யும் முன்பே தனியார் நிகழ்ச்சியில் கமல் பங்கேற்றதால் சர்ச்சை. இது தொடர்பாக கமலிடம் விளக்கம் கேட்கப்படும் - சுகாதாரத்துறை செயலாளர்.
தங்கம் சவரனுக்கு ரூ.8 அதிகரிப்பு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.8 அதிகரித்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.4,468-க்கும் ஒரு சவரன் ரூ.35,744-க்கும் விற்பனை.
சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.65.30-க்கு விற்பனை.
அதிமுக தேர்தல் – இடைக்கால தடை விதிக்க மறுப்பு
அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தலுக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு.
அனைத்து தரப்பு வாதத்தை கேட்காமல் இடைக்கால தடை விதிக்க முடியாது. முன்னாள் அதிமுக எம்பி கே.சி.பழனிசாமியின்...
மீனவர்களுக்கு எச்சரிக்கை
மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதி, வடக்கு ஆந்திரா, ஒடிசா, வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும்.
பலத்த காற்று வீச வாய்ப்புள்ள பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை...
அமைதிக்கான நோபல் பரிசு இருவருக்கு அறிவிப்பு
மரியா ரெஸ்ஸா, டிமிட்ரி முராடோவ் ஆகியோருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது
அமைதி, ஜனநாயகத்திற்கான அடிப்படையாக கருத்து சுதந்திரம் வலியுறுத்தியதற்காக நோபல் பரிசு
பிலிப்பைன்ஸ் பத்திரிக்கையாளர் மரியா ரெஸ்ஸா, ரஷ்ய பத்திரிக்கையாளர் டிமிட்ரிக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது
மாலை 5 மணிக்கு உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு?
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் இன்று மாலை 5 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார்.
செய்தியாளர் சந்திப்பில் ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி குறித்து அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில்...
“கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகை கடன் தள்ளுபடி”
5 சவரன் வரையிலான நகைக் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை பெறப்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும்.
தகுதியின்...
தாத்தா, பாட்டியை வீட்டில் வைத்து கொளுத்திய பேரன்
ஆத்தூர் அருகே பேரனை கண்டித்த ஆத்திரத்தில் தாத்தா, பாட்டி வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது வீட்டின் வெளிப்புற கதவை பூட்டி தீவைத்து எரித்து கொலை.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கொத்தாம்பாடி கிராமம்...
“கோயில் நிலங்களை ஆக்கிரப்பு செய்தால் கைது”
கோயில் சொத்துக்களை அபகரிப்பவர்களை கைது செய்வதற்கான சட்ட மசோதாவை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார்.
இதுவரை கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பவர்கள் மீது சிவில் வழக்குகள் மட்டுமே போட...