மாலை 5 மணிக்கு உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு?

258
election
Advertisement

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் இன்று மாலை 5 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார்.

செய்தியாளர் சந்திப்பில் ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி குறித்து அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்த ஆணையம் தீவிரமடைந்துள்ளது.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசியில் உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது.

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்திலும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட உள்ளது.