விராட் கோலிக்கு கொரோனா

437

அண்மையில் விராட் கோலி, ரோஹித் ஷர்மா இருவரும் இங்கிலாந்து கடை வீதிகளுக்கு சென்று சில பொருட்கள் வாங்கினார்கள். அத்துடன் ரசிகர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டனர். இந்த புகைப்படங்கள் வைரலானதைத் தொடர்ந்து பிசிசிஐ கவனத்திற்கும் சென்றது.

இங்கிலாந்து தொடருக்கு பயோ பபுள் இல்லையென்றாலும், ரசிகர்களிடம் நெருங்கி செல்ல கூடாது என பிசிசிஐ வாய்மொழி உத்தரவு பிறப்பித்திருந்தது. இதற்கு காரணம், அஸ்வினுக்கு கொரோனா உறுதியாதால்தான்.

அப்படியிருக்கும்போது ரோஹித், கோலி இருவரும் முகக் கவசம் அணியாத ரசிகர்களுடன் நெருங்கி நின்று புகைப்படம் எடுத்தது பிசிசிஐ நிர்வாகிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் நேற்று இரவு கோலி, ரோஹித் ஷர்மா இருவரையும் காணோலி காட்சி மூலம் அழைத்துப் பேசிய பிசிசிஐ நிர்வாகிகள் இதுதொடர்பாக அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்களாம்.

ஒருவேளை உங்களுக்கு கொரோனா அறிகுறியோ அல்லது காலநிலை ஒத்துக்கொள்ளாமல் காய்ச்சல் வந்தாலும்கூட உடனே நீங்கள் தனிமைப்படுத்தப்படுவீர்கள். காரணம், நீங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்தான்.

யாரைகேட்டு விதிமுறையை மீறி முகக் கவசம் அணியாத ரசிகர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டீர்கள் என நிர்வாகிகள் அதிருப்தியை வெளிப்படுத்தியதாக தகவல் வெளியாகியாகி இருந்தது.

இந்நிலையில், விராட் கோலிக்கு கொரோனா உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோஹித் ஷர்மாவும், மற்றொரு வீரரும் அறிகுறிகளோடு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனராம்.

இதனால், 24ஆம் தேதி கவுண்டி அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா பங்கேற்காது என தகவல் வெளியாகியுள்ளது. டெஸ்ட் போட்டி நடக்குமா இல்லையா என்பது பின்னர்தான் தெரிய வரும் என பிசிசிஐ நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.