எலான் மஸ்கிற்கு எதிராக ட்விட்டர் தொடர்ந்த வழகிற்கு அக்டோபர் மாதம் விசாரணை நடைபெறும்

226

ட்விட்டரை வாங்க மறுத்த எலான் மஸ்கிற்கு எதிராக அந்நிறுவனம் தொடர்ந்த வழக்கில் அக்டோபர் மாதம் விசாரணை நடைபெறும் என அமெரிக்காவின் டெலவர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 44 பில்லியன் டாலர் கொடுத்து ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தத்தில் இருந்து விலகிய எலான் மஸ்க் மீது, ட்விட்டர் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. அமெரிக்காவின் டெலவர் நீதிமன்றத்தில் ட்விட்டர் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், அக்டோபரில் வழக்கு தொடர்பாக ட்விட்டர் மற்றும் எலான் மஸ்கிடம் விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.