கியூபாவில் சீனாவின் உளவு நிலையம் கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து இயங்கி வருவதை அமெரிக்கா உறுதி செய்துள்ளது.

311
Advertisement

அமெரிக்கா-சீனா இடையேயான உறவு நீண்ட காலமாக மோதல் போக்கில் இருந்து வருகிறது.

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்றவுடனே, சீனா உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்த மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்து அமெரிக்க உளவு அமைப்புகள் தேசிய பாதுகாப்பு குழுவிடம் எடுத்துக்கூறின.

இந்நிலையில், கியூபாவில் சீனா உளவு நிலையம் கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருவதை அமெரிக்கா உறுதி செய்துள்ளது.