யுனெஸ்கோ அமைப்பில் மீண்டும் இணைய விரும்புவதாக அமெரிக்கா அரசு அறிவித்துள்ளது.

234
Advertisement

உலக நாடுகளுக்கிடையே அமைதி மற்றும் பாதுகாப்பை பேணுதல், நட்புறவை வளர்க்கும் பொது அமைப்பாக ஐ.நா. உள்ளது.

அதன் துணை நிறுவனங்களில் ஒன்றாக யுனெஸ்கோ அமைப்பு விளங்குகிறது. யுனெஸ்கோ அமைப்பின் நிரந்தர உறுப்பினராக அமெரிக்கா இருந்து வந்தநிலையில், இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையேயான மோதல் காரணமாக யுனெஸ்கோ அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகியது. இந்த நிலையில்,

யுனெஸ்கோ அமைப்பில் மீண்டும் இணைய விரும்புவதாக அமெரிக்கா அரசு அறிவித்துள்ளது. ஐ.நா. அமைப்பில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துவரும் நிலையில் அமெரிக்கா இந்த முடிவை எடுத்துள்ளது, குறிப்பிடத்தக்கது.