தமிழ்நாட்டில் 16 மாவட்ட ஆட்சியர்களை பணியிடமாற்றம் செய்து தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்…..

110
Advertisement

அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக இருந்த தீபக் ஜேக்கப், தஞ்சை மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக கமல்கிஷோர் நியமிக்கப்பட்டுள்ளார். நாகை மாவட்ட ஆட்சியராக இருந்த அருண் தம்புராஜ், கடலூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜான் வர்கீஸ், நாகை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வணிகவரித்துறை இணை ஆணையராக இருந்த சங்கீதா, மதுரை மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நகராட்சி நிர்வாக இணை ஆணையராக இருந்த விஷ்ணுசந்திரன், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சேலம் மாநகராட்சி ஆணையராக இருந்த கிறிஸ்துராஜ், திருப்பூர் மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை குடிநீர் வழங்கல், கழிவுநீரகற்று வாரிய நிர்வாக இயக்குநர் ராஜ கோபால் சுங்கரா, ஈரோடு மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு பால் உற்பத்திக் கழக நிர்வாக இணை இயக்குநர் சரயு, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக பூங்கொடியும், சிவகங்கை மாவட்ட ஆட்சியராக ஆஷா அஜித்தும், அரியலூர் மாவட்ட ஆட்சியராக ஆனிமேரியும், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக மெர்சி ரம்யாவும், நாமக்கல் மாவட்ட ஆட்சியராக உமாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.