இலங்கையில் பெட்ரோல் நிலையங்கள் மூடல்

200

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு மிகப்பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை கடும் உயர்வை சந்தித்துள்ளது.

ஒரு லிட்டர் பெட்ரோல் 420 ரூபாய்க்கும், டீசல் 400 என்ற விலையில் விற்பனையாகிறது.

ஒரு பக்கம் தட்டுப்பாடு, மற்றொரு பக்கம் விலை உயர்வு என இரு முனை தாக்குதலால் மக்கள் நிலைகுலைந்துள்ளனர்.

மேலும், பெட்ரோல், டீசலுக்காக பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழலும் உள்ளது.

இதன் காரணமாக பொதுமக்கள் சில்லரை விற்பனை பெட்ரோல் நிலையங்களுக்கு மிரட்டல் விடுத்ததால் மக்கள் தொகை அதிகமாக உள்ள மாவட்டங்களில் 40 சில்லரை பெட்ரோல் விற்னை நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக எரிபொருள் வினியோகஸ்தர் சங்கத்தை சேர்ந்த சாந்தா சில்வா தெரிவித்துள்ளார். 

கொழும்பு புறநகரில் 50 ஆயிரம் லிட்டர் எரிபொருளை பதுக்குவதற்கு சில்லரை விற்பனை நிலையம் மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

அரசு அதிகாரிகள் அங்கு சோதனை நடத்தி, ஒட்டுமொத்த இருப்பையும் விலை உயர்வுக்கு முந்தைய பழைய விலையில் விற்பனை செய்ய உத்தரவிட்டனர்.