அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா

399

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அந்நாட்டு அணியுடன் 3 T-20, 5 ஒருநாள் போட்டி, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

அந்த வகையில் கடந்த 7-ம் தேதி நடந்த முதல் T-20 போட்டியில் இலங்கையை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

இந்நிலையில், கொழும்புவில் நேற்று நடந்த 2-வது T-20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனை தொடர்ந்து 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் களமிறங்கினர்.

கேப்டன் பின்ச் 24 ரன்னிலும், வார்னர் 21 ரன்னிலும் வெளியேறினார்.

இறுதியில் ஆஸ்திரேலிய அணி 17.5 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்தது.

இதன் மூலம் இலங்கையை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 3 T-20 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது.