சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வரும் 6 இங்கிலாந்து வீரர்களை சில ஐ.பி.எல். அணிகளின் உரிமையாளர்கள் அணுகி ரூ.50 கோடி வரை பேரம் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது…

102
Advertisement

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், இங்கிலாந்து கவுண்டி அணி நிர்வாகம் ஆகியவற்றை விடுத்து தங்களுடன் இணைந்து முழுமையாக பணியாற்றுவது தொடர்பாக வீரர்களுடன் சில ஐ.பி.எல்.

அணிகளின் உரிமையாளர்கள் தொடக்க நிலை பேச்சு நடத்தியதாக இங்கிலாந்தின் பத்திரிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. கால்பந்து விளையாட்டில் உள்ளது போலவே வீரர்கள் லீக் அணிகளுடன் ஆண்டு ஒப்பந்த முறையில் பணியாற்றுவது தொடர்பாக உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் வீரர்கள் சங்கம் ஆலோசித்து வரும் நிலையில் இது நிகழ்ந்துள்ளது.

அதுபோல சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகி ஆண்டு முழுவதும் தங்களுடைய லீக் போட்டியில் விளையாடும்படி இங்கிலாந்தை சேர்ந்த 6 முன்னணி வீரர்களை சில ஐ.பி.எல். அணிகளின் உரிமையாளர்கள் சுமார் 50 கோடி ரூபாய் வரை ஊதியமாக பேரம் பேசி உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், இங்கிலாந்து வீரர்களை போல ஆஸ்திரேலியா அணியின் 20 ஓவர் வீரர்களையும் அணுகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.