Advertisement

17. உலக செஸ் சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை, இந்திய கிராண்ட் மாஸ்டர் 16 வயதான பிரக்ஞானந்தா இரண்டாவது முறையாக  தோற்கடித்தார்.

உலக செஸ் சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை, இந்திய கிராண்ட் மாஸ்டர் 16 வயதான பிரக்ஞானந்தா இரண்டாவது முறையாக  தோற்கடித்தார்.

“செசபிள்” மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டி, ஆன் லைன் மூலம் நடைபெற்று வருகிறது.

சர்வதேச சதுரங்க வீரர்கள் கலந்துகொள்ளும் இந்த போட்டியின் ஐந்தாவது சுற்றில், உலக சாம்பியனும் நம்பர் ஒன் வீரருமான நார்வே நாட்டின் மேக்னஸ் கார்ல்சனும், பிரக்ஞானந்தாவும் மோதினர்.

11ஆம் வகுப்பு பயின்று வரும் பிரக்ஞானந்தாவுக்கு தேர்வு இருப்பதால், வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் இந்த போட்டியில் விளையாடினார்.

இதில், பிரக்ஞானந்தா 40 வது நகர்த்தலில் உலகசாம்பியன் கார்ல்சனை தோற்கடித்தார்.

ஒரே ஆண்டில், இரண்டாவது முறையாக உலக செஸ் சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை, பிரக்ஞானந்தா தோற்கடித்து சாதனை படைத்தார்.

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற “ஏர் திங்ஸ் மாஸ்டர்ஸ்” ரேபிட் செஸ் போட்டியிலும், மேக்னஸ் கார்ல்சனை பிரக்ஞானந்தா தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.