இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார் தமிழக வீரர் பிரக்ஞானந்தா

282

உலக அளவில் சிறந்த 16 வீரர்கள் பங்கேற்றுள்ள செஸ்ஸபிள் மாஸ்டர் ஆன்லைன் செஸ் போட்டிகள் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது.

மொத்தம் 9 தொடர்களாக நடைபெறும் இந்த போட்டியில் சென்னையைச் சேர்ந்த 16 வயது இளம் வீரர் பிரக்ஞானந்தாவும் பங்கேற்றுள்ளார்.

இதில் கடந்த செவ்வாய் கிழமை நடைபெற்ற கால் இறுதி சுற்றில், பிரக்ஞானநந்தா 2.5-1.5 என்ற கணக்கில் சீனாவின் வெய் யி-யை தோற்கடித்திருந்தார்.

இதனை தொடர்ந்து அரையிறுதி சுற்றில் நெதர்லாந்து வீரர் அனிஷ் கிரியை எதிர்கொண்டார்.

இந்த சுற்றில் 2-2 என்ற கணக்கில் இருவரும் சமநிலையில் இருந்ததால், வெற்றியை தீர்மானிக்க பிளே ஆஃப் ஆட்டம் நடத்தப்பட்டது.

இதையடுத்து டை பிரேக்கரில் 1.5-0 .5 என்ற புள்ளிக்கணக்கில் அனிஷ் கிரியை வீழ்த்தி, பிரக்ஞானந்தா இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

அதே சமயம் மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் உலகின் நம்பர்-1 வீரர் மேக்னஸ் கார்ல்சனுடன் மோதிய சீனா வீரர் டிங் லிரன் வெற்றி பெற்றார்.

இதனையடுத்து செஸ்ஸபிள் மாஸ்டர் இறுதிப்போட்டியில் சீனா வீரர் டிங் லிரன் உடன் தமிழக வீரர் பிரக்ஞானந்தா மோத உள்ளார்.