எல்லை விவகாரம் – 16வது கட்ட பேச்சுவார்த்தைக்கு இந்தியா – சீனா ஒப்புதல்

277

கடந்த 2020ஆம் ஆண்டு மே மாதம் முதல் கிழக்கு லடாக் எல்லை பகுதிகளில் இந்தியா-சீனா இடையே பதற்றம் நீடித்து வருகிறது.

பதற்றத்தை தணிக்க இருதரப்பு ராணுவமும் பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்திய, சீன ராணுவ அதிகாரிகள் நிலையிலான 15வது சுற்று பேச்சுவார்த்தை கடந்த மார்ச் மாதம் 11ஆம் தேதி நடைபெற்றது.

இந்த நிலையில் இருதரப்பு இடையிலான ராணுவ ரீதியிலான அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையை விரைவில் தொடங்க இந்தியா மற்றும் சீனா ஒப்புக்கொண்டுள்ளன.

அதன்படி, எல்லை விவகாரம் தொடர்பாக இருநாடுகள் இடையே 16வது கட்ட பேச்சுவார்த்தை விரைவில் நடைபெற உள்ளது.