Gotabaya-Rajapaksa
Advertisement

விடுதலைப்புலிகளுடனான போரில் பழிவாங்கும் உணர்வு இல்லை என இலங்கை அதிபர்  கோத்தபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டின் விடுதலையையும், பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாத்த ராணுவ படைகளை எந்த சூழ்நிலையிலும் மறக்க முடியாது என்றும், அந்த போரில், வெறுப்புணர்வோ, ஆத்திரமோ அல்லது பழிவாங்கும் உணர்வோ இருந்தது இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் இனவெறிக்கோ, எந்தவகையான பயங்கரவாதத்துக்கோ இடமில்லை என்று குறிப்பிட்டுள்ள கோத்தபய ராஜபச், தற்போது சந்தித்து வரும் சூழ்நிலையை யாருமே எதிர்பார்க்கவில்லை என்றும், பொருளாதார நெருக்கடி, அரசியல், சமூக கலவரமாக மாறிவிட்டது எனவும்  எந்த சூழ்நிலையிலும், நாட்டின் இறையாண்மையையும், சுதந்திரத்தையும் பாதுகாக்கும் கொள்கையை கைவிட மாட்டோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.