நிலவின் மண்ணில் இருந்து நிலவில் செங்கல் தயாரிக்கும் ரோபோவை சீன பொறியாளர்கள் வடிவமைத்துள்ளனர்.!

242
Advertisement

நிலவில் கட்டிட கட்டுமான பணிகளை தொடங்க சீனா தயாராகி வருகிறது. சீனாவின் இந்த லட்சியப் பணியில் 100க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் விண்வெளி ஒப்பந்ததாரர்கள் அடங்கிய குழு ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் சீனாவின் உகானில், ஹுவாசோங் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானிகள் மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் நிலவில் அதிக நாட்கள் தங்கி வாழ்வதன் சாத்தியக்கூறுகளை மட்டும் ஆராயாமல், நிலவில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் திட்டத்தில் சீனா செயல்பட்டு வருவதாக மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது. இதில் சீனா வெற்றி பெற்றால், நிலவில் தளம் அமைக்கும் முதல் நாடு என்ற பெருமையை சீனா பெறும் என்று பேசப்பட்டது. மேலும், நிலவின் மண்ணில் இருந்து செங்கல் தயாரிக்கும் ரோபோவை சீன பொறியாளர்கள் வடிவமைத்துள்ளனர்.

அதன் பிறகு அந்த செங்கற்களைக் கொண்டு அங்கு கட்டிடத்தை வடிவமைக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இந்த மாநாட்டில், சீனா அந்த ரோபோவை சாங்-8 மிஷன் மூலம் 2028 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தும் என்று விஞ்ஞானிகள் கூறினர்…!