ஆஸ்திரேலியாவில் வழிதவறி அடர்ந்த வனப்பகுதிக்குள் 5 நாட்களாக சிக்கி தவித்த பெண்ணை போலீசார் மீட்டனர்.
லில்லியன் என்ற பெண் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுலா சென்றபோது, வழிதவறி காட்டுக்குள் சென்றுள்ளார்.அவரது கார் சேற்றில் சிக்கியுள்ளது. இதனால்,அதிர்ச்சியடைந்த உறவினர்களை தொடர்பு கொள்ள முயன்றபோது, சிக்னல் கிடைக்கவில்லை என தெரிகிறது.
இது குறித்து, உறவினர்கள் அளித்த புகாரின் பேரில், தேடுதல் வேட்டையில் இறங்கிய போலீசார், காட்டுப் பகுதியில் சிக்கி தவித்த பெண்ணை கண்டு பிடித்தனர். தன்னை மீட்க வந்த போலீசாரை பார்த்ததும், அப்பெண் உணர்ச்சி பெங்க கதறியழுத வீடியோ வெளியாகியுள்ளது.