ஆப்கனில் குண்டுவெடிப்பு 14 போ் பலி

197

ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள காபூல் நகரத்தில் உள்ள ஹஸ்ரத் ஜகாரியா மசூதியில் நேற்று மாலை பலா் தொழுகையில் ஈடுபட்டு கொண்டிருந்தனா்.

அப்போது மசூதி மீது பயங்கரவாதிகள் குண்டு வீசி தாக்குதல் நடத்தினா்.

இதில் வழிபட்டு கொண்டிருந்த 5 போ் பரிதாபமாக உயிரிழந்தனா்.

மசூதியில் நடைபெற்ற தாக்குதலில் 5 போ் உயிரிழந்ததாகவும், 22 போ் காயமடைந்துள்ளதாகவும் மருத்துவ தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல நாட்டின் வட பகுதியில் உள்ள மசார்-இ-ஷெரீப் என்ற நகரத்தில் மினி பேருந்து மீது 3 குண்டுகள் வீசப்பட்டது.

இதில் 9 போ் உயிரிழந்தனர் என்றும், 15 போ் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இதுவரை எந்த ஒரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.