dead-body
Advertisement

கோவையில் 50 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் சாலையில் வீசப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாலையில் வீசப்பட்ட பெண் யார்?, வீசிச் சென்றது யார் என போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

கோவை மாவட்டம் சின்னியம்பாளையம் சோதனை சாவடி அருகே உள்ள சாலையில் இருந்து 50 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலத்தை போலீசார் கைப்பற்றினர்.

உடல் சிதைந்த நிலையில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதால், அவர் யார் என்று அடையாளம் தெரியவில்லை.

போலீசார் விபத்து நடந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், கோவை நோக்கி வந்த ஸ்கார்பியோ காரில் இருந்து பெண் ஒருவர் வீசப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து பெண் காரில் இருந்து தள்ளப்பட்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டு சாலையில் வீசப்பட்டாரா? என்ற கோணத்தில் 2 தனிப்படைகள் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.