இருளில் முழங்கிய உக்ரைன்

293

உக்ரைனில் மின் உற்பத்தி நிலையங்கள் மீது ரஷ்யா நடத்திய தாக்குதல் காரணமாக பல நகரங்கள் இருளில் மூழ்கியுள்ளன.

ரஷ்யாவின்  ஏவுகணை தாக்குதலில் உக்ரைனின் முக்கிய மின் உற்பத்தி நிலையங்கள் பாதிக்கப்பட்டன. இதனால் கீவ் உள்ளிட்ட நகரங்களில் மின் தடையும், தண்ணீர் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. இதனால், உக்ரைன் மக்கள் தவிப்புக்குள்ளாகி உள்ளனர்.

இதுகுறித்து பேசிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, “உக்ரைனின் 40 சதவீத மின் நிலையங்கள் அழிக்கப்பட்டுவிட்டன என்றும், இதனால் நாடு முழுவதும் பெரும் மின்தடை ஏற்பட்டுள்ளதாக கூறினார்.  மின் உற்பத்தி பணியை சரிசெய்ய முயற்சி நடந்து வருவதால், மக்கள்  மின்சாரத்தை குறைவாக பயன்படுத்த அறிவுறுத்தி உள்ளார்.