Advertisement

இலங்கை சிறையில் இருந்து விடுதலையான 12 தமிழக மீனவர்கள் சென்னை வந்தடைந்தனர். அவர்களை தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 12 மீனவர்கள் எல்லைத் தாண்டி வந்ததாக கூறி, அவர்களை கடந்த மார்ச் மாதம் இலங்கை கடற்படை கைது செய்தது.

தமிழக அரசும், மத்திய அரசு மேற்கொண்ட முயற்சியால், இலங்கை சிறையில் இருந்து  தமிழக மீனவர்கள் 12 பேரும் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், கொழும்பில் இருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்த மீனவர்களை தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் சால்வை அணிவித்து வரவேற்றனர்.

மீனவர்களுக்கு பாஜகவினரும் சால்வை அணிவித்தனர்.