மனைவி இறந்த துக்கம் தாங்காமல் தற்கொலைக்கு முயன்ற கணவன்

281

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ராயவேலூரைச் சேர்ந்த பெருமாள்.

இவர் உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.

உடனடியாக மீட்கப்பட்ட பெருமாளுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

பெருமாள் கடந்த 2 மாதங்களுக்கு முன் மனைவியை அடித்து கொலை செய்தததும், தற்போது ஜாமினில் உள்ள அவர் மனைவி இறந்த துக்கம் தாங்காமல் தற்கொலைக்கு முயன்றதும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.