இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த 1 லட்சம் ரூபாய் கொள்ளை

173

திருவாரூரில் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ஒரு லட்ச ரூபாய் பணத்தை, பட்டப்பகலில் மர்ம நபர் ஒருவர் கொள்ளையடித்துள்ளார்.

பன்னீர் செல்வம் என்பவர் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ஒரு லட்ச ரூபாயை மர்ம நபர் ஒருவர் நோட்டமிட்டு லாவகமாக திருடிச்சென்றுள்ளார்.

கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து கொள்ளையனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.