மின்சாரம் தாக்கி உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு நிதியுதவி

561

ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகேயுள்ள மணிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஆரோன்.

அவர், கடந்த15ம் தேதி மின்வயர் அறுந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயரிழந்தார்.

இந்நிலையில், உயிரிழந்த ஆரோன் குடும்பத்திற்கு மின்வாரியம் மூலம் 5 லட்சம் ரூபாய் நிவாரண தொகையை நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் வழங்கி ஆறுதல் கூறினார்.