கையோடு மலைப்பாம்பை மருத்துவமனைக்கு கொண்டு வந்த நபர்

404
snake
Advertisement

புதுக்கோட்டை மாவட்டம் மேலதுருவாசபுரத்தை சேர்ந்தவர் பாண்டி.

இவரின் மனைவியை மலைப்பாம்பு கடித்துள்ளது.

இதையடுத்து, சிகிச்சைக்காக தனது மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து வந்த அவர் கையோடு சாக்கில் மலைப்பாம்பையும் மருத்துவரிடம் காண்பிப்பதற்காக கொண்டு வந்துள்ளார்.

வனத்துறையினருக்கு இதுபற்றி தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து வனத்துறையினர் மலைப்பாம்பை கைப்பற்றி காட்டுப்பகுதிக்குள் விடுவதற்காக கொண்டுசென்றனர்.