காவல் நிலையம் அருகே பிரபல ரவுடி வெட்டிக்கொலை

171

புதுச்சேரி அருகேயுள்ள கருவடிக்குப்பத்தைச் சேர்ந்தவர் சரத்.

அவர் காவல்நிலையம் அருகே உள்ள தனது உறவினர் வீட்டில் இருந்தபோது, மர்ம கும்பல் வீட்டுக்குள் புகுந்து, சரத்தின் கழுத்து, தலை, முகம் உள்ளிட்ட பகுதிகளில் வெட்டி கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பியோடியது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலைக் கும்பலை தேடி வருகின்றனர்.

படுகொலை செய்யப்பட்ட சரத் மீது கொலை, வெடிகுண்டு வீச்சு, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.