Advertisement
உடுமலை கோயில் அடிவாரத்தில் இருந்து 750 மீட்டர் உயரத்தில் அடர்ந்த வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி உள்ளது.
இந்த அருவிக்கு, மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள ஓடைகள் மூலம் தண்ணீர் வருகிறது.
இந்த பகுதியில் மழை பெய்து வருவதால், பஞ்சலிங்க அருவிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பஞ்சலிங்க அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிப்பதற்கு கோயில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.