பிற நாடுகளை தொடர்ந்து அச்சறுத்தும் வடகொரியா

257

வடகொரியா ஜப்பான் கடற்பகுதியில் 2 பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை நடத்தி உள்ளது. வடகொரியாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள தயாராகும் வகையில் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் கடற்படைகள் கொரிய எல்லையில் கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தொடர்ந்து, வடகொரியா ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்றும் இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி வடகொரியாக பரிசோதனை செய்தது. இந்த ஏவுகணைகள் ஜப்பானின் பிரத்தியேக பொருளாதார மண்டலங்களுக்கு வெளியே விழுந்ததாகத் தெரிகிறது.

வடகொரியா முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு ஏவுகணை சோதனையை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்து கடந்த மாதம் வரை 30-க்கும் அதிகமான ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.