சாலையின் நடுவே ஓடிய குழந்தை

333

நீலகிரி மாவட்டம் கூடலூர் பழைய கோட் சாலையில், தாயுடன் நடந்து சென்ற குழந்தை திடீரென தாயின் கையை உதறிவிட்டு சாலை நடுவே ஓடியுள்ளது.

அப்போது, வேகமாக வந்த இருசக்கர வாகன ஓட்டி, குழந்தை எதிர்பாராமல் அருகில் வந்ததும் சாதுர்யமாக செயல்பட்டு வாகனத்தை நிறுத்தினார்.

இதனால், அந்த குழந்தை காயமின்றி தப்பியது.

இந்த சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிரது.