திருவண்ணாமலை அருகே,  வீட்டின் மாடியில் உறங்க சென்ற விவசாயியின் வீட்டிலிருந்த  33 சவரன் தங்க நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியது….

111
Advertisement

திருவண்ணாமலை அடுத்த துர்க்கை நம்பியந்தல் கிராமத்தில் வசிப்பவர் ஆனந்தன் என்ற விவசாயி.

இவர் தனது குடும்பத்துடன் வீட்டின் மாடியில் உறங்க சென்றதாக கூறப்படுகிறது. இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டிற்குள் புகுந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 33 சவரன் தங்க நகை, 250 கிராம் வெள்ளி மற்றும் 15 ஆயிரம் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதுக்குறித்து, ஆனந்த் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் மர்மநபர்களை தேடி வருகின்றனர்.