ராஜபாளையம் அருகே, குடிநீர் குழாய் உடைப்பை நகராட்சி நிர்வாகம் சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்…

113
Advertisement

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சியில் 42 வார்டுகளை  உள்ளது.

இந்த நகராட்சியில் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக தாமிரபரணி கூட்டு குடிநீர், மேம்பால பணிகள் உள்ளிட்டவைகள் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் ரயில்வே பீடர் சாலை காந்தி சிலை அருகே சுமார் 10க்கும்  மேற்பட்ட இடங்களில் குடிநீர் குழாய் உடைந்து நீர் வெளியேறி வீணாகி வருகிறது. எனவே,  நகராட்சி நிர்வாகம் உடைப்பை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.