உலக ரத்த கொடையாளர் தினத்தையொட்டி சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ரத்ததானம் அளிக்கும் நிகழ்வை சென்னையில், தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியினிடையே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், தமிழக பாஜக தலைவர் ஆதாரமற்ற புகாரை தெரிவித்ததாக குற்றம்சாட்டினார்.
அண்ணாமலை குற்றம்சாட்டிய “அனிதா டெக்ஸ்கோட்” என்ற நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கப்படவில்லை என்றும் அமைச்சர் மறுப்பு தெரிவித்தார்.
இதனால், அண்ணாமலை கூறிய குற்றச்சாட்டை திரும்பப்பெற வேண்டும் என்றும் இல்லையென்றால் சட்டரீதீயான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மா.சுப்பிரமணியன் கூறினார்.