நீதிமன்றத்தில் நீதிபதிக்கு கத்திக்குத்து – சேலத்தில் பரபரப்பு

354
tamil news today
Advertisement

சேலம் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவி வகித்து வருபவர் பொன் பாண்டியன் என்பவரை நீதிமன்ற ஊழியர் பிரகாஷ் அவரை கத்தியால் குத்தியுள்ளார். பணிமாறுதல் ஆணை வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அவரை கத்தியால் குத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நீதிபதியை சேலம் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர், அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடந்த இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கத்திக்குத்து தொடர்பாக நீதிமன்ற ஊழியர் பிரகாஷ் என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.