ஜூன் 13-முதல் பள்ளிகள் திறப்பு

406

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:

1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 13-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும்.

11-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும்.

பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும்.

பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 13ல் துவங்கப்படும்.

பிளஸ் 1 வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 14ல் துவங்கப்படும்.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 3ல் துவங்கப்படும்.

வரும் கல்வி ஆண்டில் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும்.

அடுத்த ஆண்டு பொதுத்தேர்வு எப்போது நடைபெறும் என்ற விவரம் ஆன்லைனில் வெளியிடப்படும் என்றார்.