ரஷ்யாவுக்கு ட்ரோன்கள் வழங்கியதை ஒப்புக்கொண்ட ஈரான்

245

ரஷ்யாவுக்கு ட்ரோன்கள் வழங்கியதை ஈரான் முதல் முறையாக ஒப்புக்கொண்டுள்ளது.

உக்ரைன் மீது 9 மாதங்களாக போர் தொடுத்து வரும் ரஷ்யா, கடந்த சில வாரங்களாக வெடிகுண்டு ட்ரோன்கள் மூலம் உக்ரைன் நகரங்களில் சரமாரியாக தாக்குதல் நடத்தியது. உக்ரைனின் முக்கிய மின்நிலையங்கள் மற்றும் பொது உள்கட்டமைப்புகளை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. ரஷ்யா தாக்குதலுக்கு பயன்படுத்தி வரும் ட்ரோன்கள், ஈரானால் ரஷ்யாவுக்கு வழங்கப்பட்டவை என்று அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் குற்றம் சாட்டின.

ஆனால் இந்த குற்றச்சாட்டை ஈரான் தொடர்ந்து மறுத்து வந்தது. இந்நிலையில் ரஷ்யாவுக்கு ட்ரோன்கள் வழங்கியதை முதல் முறையாக ஈரான் ஒப்புக்கொண்டுள்ளது. இதுகுறித்து பேசிய ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர், ரஷ்யாவுக்கு குறைந்த எண்ணிக்கையிலான ட்ரோன்களை வழங்கியதாகவும், ஆனால் ட்ரோன்கள் உக்ரைன் போருக்கு சில மாதங்களுக்கு முன்பே வழங்கப்பட்டதாக விளக்கம் அளித்துள்ளார். உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா ஈரான் ட்ரோன்களை பயன்படுத்தியதற்கான ஆதாரங்களை வழங்கினால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.