நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக யானைகள் வளர்ப்பு முகாமில், யானை தாக்கி பாகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது…

148
Advertisement

சமயபுரம் மசினி  யானை, 2018 ஆண்டு யானை பாகனை அடித்துக்கொன்றது.

அதைத்தொடர்ந்து, எம்.ஆர். புரம் யானைகள் முகாமில் மசினி யானை பராமரிக்கப்பட்டு வந்தது. பின்னர் மசினி யானை, 2019 ஆம் ஆண்டு முதுமலை புலிகள் காப்பக தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு கொண்டு வரப்பட்டது. அதனை பாலன் என்ற யானைப்பாகன் பராமரித்து வந்தார். இந்நிலையில், மசினி யானைக்கு உணவளிக்க சென்ற பாகன் பாலனை மசினி யானை கடுமையாக தாக்கியது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. யானைகள் முகாமில் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.