பல பெண்களை ஏமாற்றி ஆபாச வீடியோ எடுத்தவன்.. நீதிமன்றம் அதிரடி.

384
Advertisement

நூற்றுக்கணக்கான பெண்களை ஏமாற்றி அவர்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி வந்த நாகர்கோயிலை சேர்ந்த காசிக்கு ஆயுள் தண்டனை விதித்து விரைவு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.


கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்தவன் காசி (26). இத்தனை வயது ஆகியும் வேலைக்கு எதுவும் செல்லாமல் நண்பர்களுடன் ஊர் சுற்றுவதையே முழு நேரமாக வைத்திருந்தவன். அப்பா, அம்மா சம்பாதித்த பணத்தில் ஜாலியாக இருந்த காசி, சினிமாக்களில் வரும் ப்ளே பாய் போல வாழ்க்கையை நடத்தி வந்தான்.


பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் அழகான இளம்பெண்களிடம் நைசாக பேசி தனது காதல் வலையில் விழா வைப்பான் காசி. அவ்வாறு காதலில் விழுந்த பெண்களை தனியாக வர சொல்லி அவர்களுடன் உல்லாசமாக இருந்துள்ளான். அப்படி உல்லாசமாக இருப்பதை அந்த பெண்களுக்கு தெரியாமல் வீடியோ எடுத்து, அதை வைத்து அந்த பெண்களை மிரட்டி மீண்டும் தனது காம இச்சைக்கு பயன்படுத்துவான்.

அதற்கு இணங்காத பெண்களிடம், ஆபாச வீடியோவை உனது வீட்டில் உள்ளவர்களிடம் காட்டிவிடுவேன் எனக் கூறி அவர்களிடம் இருந்து பணம் பறித்து வந்திருக்கிறான் காசி. இதனிடையே, காசியால் பாதிக்கப்பட்ட பெண் துணிச்சலாக புகார் அளிக்க, கோழிக்குஞ்சை அமுக்குவது போல கன்னியாகுமரி போலீஸார் 2020-ம் ஆண்டு காசியை அமுக்கினர்.