ஈச்சர் லாரியும் சுற்றுலா வாகனமும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து!!

158
Advertisement

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள அருகம்பேடு ஜோநகர் இரு கிராமங்களில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் வெள்ளி கிழமை என்பதால் சுமார் 55 பேர் சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஏத்தாப்பூரில் உள்ள ஸ்ரீ முத்துமாலை முருகன் திருக்கோவிலுக்கு இரவு 11 மணி அளவில் வழிபாடு செய்வதற்காக சென்றுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து தர்மபுரி மாவட்டம் அரூர் வழியாக சேலம் நோக்கி அதிகாலை நான்கு வழி சாலையில் டோல்கேட் அமைக்கும் பணிக்காக இருவழி சாலையை ஒரு வழி சாலையாக தேசிய நெடுஞ்சாலை துறையினர் அமைத்துள்ளனர். இந்நிலையில் ஒரு வழி சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்தது, அதே பகுதியில் எதிர் திசையில் ஈச்சர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது.