சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அ.தி.மு.க ஆட்சியில் எடப்பாடி தொகுதியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனக்கு எதிராக பொய்யான தகவல்களை கூறி வருவதாக தெரிவித்தார். தி.மு.க ஆட்சியில் நில அபகரிப்பு, கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கூறினார்.
தமிழக அரசு ஆன்லைன் ரம்மி விவகாரத்தில், மெத்தனமாக செயல்படுவதாகவும், எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்தார்.