virus
Advertisement

மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, அரசு பள்ளிக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

கோவையில் 9 ஆம் வகுப்பு மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, அரசு பள்ளிக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள சுல்தான் பேட்டை அரசு உயர்நிலைப்பள்ளியில் 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இதனையடுத்து, கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட 3 மாணவர்களும் சிகிச்சைக்காக கோவை ஈ எஸ் ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

கொரோனா பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிக்கு 3 நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.