இந்தியாவில் கொரோனா பாதிப்பு இன்று 12ஆயிரத்து 193 ஆக  அதிகரித்துள்ளது.

107
Advertisement

இந்தியாவில் நேற்று 11ஆயிரத்து 692 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இந்நிலையில், இன்று கொரோனா பாதிப்பு  கடந்த 24 மணி நேரத்தில் 12ஆயிரத்து193 ஆக  அதிகரித்துள்ளது.

இதன் மூலம், நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 48லட்சத்து 81ஆயிரத்து 877 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 42 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கொரோனாவுக்காக 67ஆயிரத்து 556 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதன் மூலம் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,31,258-லிருந்து 5,31,300 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 10,780 பேர் கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் இன்று 10,765 பேர் வீடு திரும்பியுள்ளனர்.