தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், துறை அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னையில் கொரோனா பரவல் மேலும் அதிகரிக்கக்கூடும் என எச்சரித்தார்.
தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு 300-ஐ தாண்டிய நிலையில், இன்று 400-ஐ தாண்ட வாய்ப்பு உள்ளது என்றும் கொரோனா அதிகரிக்கும் இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்த சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது எனவும் தெரிவித்தார்.
Advertisement