சென்னை சுற்றுலா சொகுசு கப்பலை புதுச்சேரியில் அனுமதிக்காதது ஏன்?

306

சென்னையில் இருந்து வந்த சொகுசு கப்பலில் இருக்கும் ஒரு சில அம்சங்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு எழுந்துள்ளதால் தான் புதுச்சேரிக்குள் நுழைய அனுமதி வழங்கவில்லை என அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் கடற்கரையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதுச்சேரியில் சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும் என்பது தான் மாநில அரசின் எண்ணம் என்றும் ஆனால் சொகுசு கப்பலில் இருக்கும் அம்சங்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவிப்பதால் அனுமதி வழங்கவில்லை என்றார்.