அசோக் கெலாட், சச்சின் பைலட் இருவரும் ஒன்றிணைந்து செயல்பட ஒப்புக் கொண்டுள்ளதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார்….

119
Advertisement

ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் கட்சி முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கும், முன்னாள் துணை முதலமைச்சர் சச்சின் பைலட்டுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.

இதையடுத்து அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட்டுடன் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல்காந்தி ஆகியோர் ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பானது டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் நடைபெற்றது. நேற்று மாலை 6 மணியளவில் தொடங்கிய இந்த பேச்சுவார்த்தையானது சுமார் நான்கு மணி நேரம் நீடித்தது. இந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அசோக் கெலாட், சச்சின் பைலட் இருவரும் ஒன்றிணைந்து செயல்பட ஒப்புக் கொண்டுள்ளதாக, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார்.

இருவரும் ஒருமனதாக இந்த முன்மொழிவை ஒப்புக்கொண்டுள்ளதாக கூறிய அவர், இது பா.ஜ.க-கவுக்கு எதிரான கூட்டுப் போராட்டமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி மீண்டும் வெற்றி பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.