Advertisement

சென்னை புத்தகக் காட்சி ஜனவரி 6ஆம் தேதி தொடங்கி 23-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிப்பு.

வார நாட்களில் மதியம் 3 மணி முதல் இரவு 8.30 மணி வரை புத்தகக் காட்சி நடைபெறும்.

விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை புத்தகக் காட்சி நடைபெறும் என அறிவிப்பு.

45 ஆவது சென்னை புத்தகக் காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடக்கிறது.

ஜனவரி 6ஆம் தேதி மாலை 6 மணிக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் புத்தகக்காட்சியை தொடங்கி வைக்கிறார்.

மாணவர்களுக்கு அனுமதி இலவசம் மற்றவர்களுக்கு வழக்கம்போல 10 ரூபாய் நுழைவுக் கட்டணம்.