“Online App மூலம் கடன் வாங்க வேண்டாம்”

228

கடன் தருவதாகக் கூறி தனிப்பட்ட நபர்களின் ஆதார், பான், மின்னஞ்சல் விவரங்களை பெறும் ஆன்லைன் செயலிகள், வாடிக்கையாளரின் செல்போனில் உள்ள விவரங்களை பயன்படுத்தி வாடிக்கையாளர்களை மிரட்டி பணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் பல எழுந்தன.

ஆன்லைன் செயலிகள் மூலம் கடன் அளிப்பவர்களின் கந்துவட்டி போன்ற அடாவடி வசூல் நடவடிக்கைகளால் பல தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன.

இதுகுறித்து குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம் அளித்தார்.

ஆன்லைன் செயலிகள், பதிவு செய்யாமலே கடன் அளிக்கும் வியாபாரத்தில் ஈடுபடுவதாக அவர் தெரிவித்தார்.

இத்தகைய செயலிகளின் நடவடிக்கைகள் குறித்து மக்கள் புகார் அளிக்க வேண்டும் என்று சக்தி காந்த தாஸ் வலியுறுத்தினார்.

வங்கிகள் பெயரில் அனுப்பப்படும் போலி கடன் வழங்கும் லிங்க்குகளை வாடிக்கையாளர்கள் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

குறுஞ்செய்திகள், தொலைபேசி அழைப்புகளையும் நம்பி எந்தவொரு தகவல்களை பகிர வேண்டாம் என்று அறிவுரை கூறிய சக்தி காந்த தாஸ், சந்தேகத்திற்கிடமான குறுஞ்செய்திகள் வந்தால், சம்பந்தப்பட்ட வங்கியின் கிளையை வாடிக்கையாளர் அணுக வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.