மகளிருக்கு 2000 ரூபாய், இளைஞருக்கு 3000 ருபாய் அள்ளி அள்ளி கொடுக்கும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை..!

91
Advertisement

கர்நாடகாவில் மே 10 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸின் ஐந்தாவது தேர்தல் “உத்தரவாதத்தை” அறிவித்த அக்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தால், பொதுப் போக்குவரத்துப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம் வழங்கப்படும் என்று வியாழக்கிழமை உறுதியளித்தார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியதாவது: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் நாளிலேயே ஐந்தாவது உத்தரவாதமும் அமல்படுத்தப்படும். கர்நாடகம் முழுவதும் பெண்கள் பொது போக்குவரத்து பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்வார்கள்.