தமிழகத்தில் 10 மாவட்டங்களில் புதிதாக எவருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்துள்ளது.
தினமும் சில நூறுபேருக்காது ஏற்பட்ட கொரோனா தொற்று அரியலூர், கள்ளக்குறிச்சி, கரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டணம், நாமக்கல், பெரம்பலூர், தேனி, திருவாரூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஒருவருக்குக்கூட ஏற்படவில்லை என்று தமிழக அரசின் செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.
அதேசமயம் 36 மாவட்டங்களில் கொரோனா தொற்றால் உயிரிழப்பு ஏற்படவில்லை என்றும் மகிழ்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளது.