தீண்டாமை தடுப்பை உடைத்தெறிந்த ஊர் மக்கள்

465
Advertisement

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள பூதிபுரத்தில், தாழ்த்தப்பட்ட சமுதாய இன மக்கள் வசித்து வருகிறார்கள் . இவர்கள் பயன்படுத்தி வந்த பொது வழியானது ,அந்த பகுதியில் உள்ள தென்னந்தோப்பு வழியே செல்கிறது. இந்நிலையில், தோப்பின் உரிமையாளர் திடீரென அந்தப் பாதையை மறைத்து தீண்டாமை தடுப்பை ஏற்படுத்தி,வழியை தடுத்துள்ளார். இதனால் அப்பகுதி மக்கள், வருவாய்த்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள், சம்பந்தப்பட்ட நிலத்தை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதனிடையே, அங்கு அமைக்கப்பட்ட தடுப்பை ஊர்மக்கள் உடைத்து எறிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.