பிலிபைன்ஸ் நாட்டில் வெடிக்க தயாராகும் எரிமலை… மக்கள் வெளியேற்றம்

532
Advertisement

பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள எரிமலை ஒன்று புகையைக் கக்கத் தொடங்கியதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.மணிலாவில் இருந்து சுமார் 70 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள “டால் எரிமலை” திடீரென்று விண்ணை முட்டும் புகையை வெளியேற்றி வருவதுடன், அடுத்தடுத்த வெடிப்புகள் நடக்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

இதனால் அப்பகுதிகளில் வசிக்கக் கூடிய ஆயிரக்கணக்கான பொதுமக்களை அரசு உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைத்தது . இது சிறிய எரிமலைதான் ஆனாலும் கடந்த 1911ம் வருடம் ஏற்பட்ட வெடிப்பில் 1300க்கும் அதிகமானோரை பலி கொண்டதாகும்.